Saturday 2 June 2012

மீனவர் சமையல்

Fried fish
Ingredients (for 5 pieces of fish)Red chilli powder2 tspCumin powder1/4tsp Turmeric powder1/4tspSaltas reqd.Oil for frying

Method:
1.Mix the powder with one tea spoon of water to make a paste.
2.Apply the paste evenly on the fish fillet. Leave it to marinate for 5 to 10 mnts.
3.Fry fish in oil till it is golden brown. Serving suggestion:Garnish with fried or fresh curry leaves, onion and lemon juice.
Submitted by: Shobana Cyril, Chennai 

Sambal with dried fish and fresh vegitables
Big OnionOneTomato OneGreen Chillies2Black Pepper powder1/4tsp Curry leaves as reqd.Corriander leavesas reqd.Oil2 Tsp

Method:
1.Chop onions, green chillies and tomato.
2.Fry the dried fish in oil. Remove the flesh from the bone. And shred the flesh into smaller peices. Add rest of the ingredients and mix together. Serving suggestion:Garnish with fried Curry leaves and fresh corriander leaves.
Submitted by: Shobana Cyril, Chennai 

வாழைப்பழ இனிப்பு 
தேவையான பொருட்கள்-வாழைப்பழம் 50 சீனி 1.5 - 2 கிலோ
 உபகரணங்கைள் - விறகு அடுப்பு-கரண்டிபெரியதுசட்டிபெரியது

செயல் முறை:
1.வாழைப்பழத்தை நன்கு பிசையவும்.
2.வாழைப்பழ விதைகளை எடுத்து விடவும்.
3.வாழைப்பழச் சதையினையும் சீனியையும் நன்கு கலந்து பாத்திரதில் போட்டு, அடுப்பில் வைத்து விடாமல் கிண்டவும்.
4.அடி பிடிக்காமல் இருக்க வெண்டுமளவு பட்டர் பொடவும்.
5.பந்து போல் உருண்டையாக வரும் வேளையில் ஒரு தட்டில் பட்டர் தடவி, அதில் ஊற்றி தட்டவேண்டும்.
6.பிறகு கத்தியால் தேவையான அளவு துண்டு போடவும், உண்ணவும்.
Submitted by: Jessi Ravel, Chennai 





உருளைக்கிழங்கு அல்வா 
தேவையான பொருட்கள்-உருளைக்கிழங்கு1/2 கிலோ சினி 1/2 கிலோபால் 1/2 லிட்டர்சாக்லெட் பவுடர்-

செயல் முறை:
1.சீனியில் ½ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமாகக் கொதிக்க வைக்கவும்.
2.ஒரு டீ ஸ்புன் பால் இதன் மிது ஊற்றவும்.
3.அமுக்கி போல் வரும் – அதை கரண்டி வைத்து எடுத்து விடவும்
4.உருளைகிழங்கை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
5.பால் , உருளைகிழங்கு இரண்டையும் நன்றாக கலங்து கட்டி இல்லாமல் நன்றாக கரைக்கவும்.
6.இத்துடன் சீனியைச் சேர்த்து கட்டை அடுப்பை பற்ற வைத்து பெரிய கரண்டியால் விடாமல் கிண்டவும்.
7.நன்கு திரண்டு வந்த்வுடன் கொஞ்சம் பட்டர் போட்டு அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
8.பந்துபோல் வந்த பின்னர் ஒரு தட்டில் பட்டர் தடவி, அத்தட்டின் மிது ஊற்றவும்.
9.சூடு இருக்கும் போதே நன்றாகத் தட்டிவிட்டு கத்தியால் வேண்டும் அளவிற்கு துண்டு கீறிவிடவும்.
10.ஆறிய பின் இத்துண்டுகளை பாத்திரத்தில் போட்டு மூடிவைக்கலாம்.
11.இரண்டு மாதங்கட்கு கெட்டு போகாமல் இருக்கும்.
Submitted by: Jessi Ravel, Chennai 



இறைச்சி பால் குழம்பு
 தேவையான பொருட்கள்-இறைச்சி1/2 கிலோ தேங்காய் 1/2 மூடிஎலுமிச்சை பழம்தேவைக்கு ஏற்பபட்டை, கிராம்பு தேவைக்கு ஏற்ப கடல்பாசி, தேவைக்கு ஏற்ப தக்காளி சிறியது,பச்சை மிளகாய் 3, வெங்காயம்2,கருவேப்பிலை, தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள்,தேவைக்கு ஏற்ப சோம்பு, சீரகம்,தேவைக்கு ஏற்பஇங்சி, பூண்டு தேவைக்கு ஏற்ப.

செயல் முறை:
1.தேங்காய் பால் தயார் செய்யவும்.
2.கட்டிப்பாலை தனியாக எடுத்து வைக்கவும்.
3.தண்ணீர் பாலைத் தனியாக எடுக்கவும்.
4.இறைச்சியை நன்கு கழுவி தண்ணீர் பாலில் வேகவைக்கவும்.
5.வேகவைத்துள்ள இறைச்சியுடன் பட்டை, கிராம்பு, கடல்பாசி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்
6.சோம்பு, சீரகம், இங்சி, பூண்டு ஆகியவற்றை நன்கு அரைக்கவும்.
7.இறைச்சி நண்கு வெந்தபின்னர் அரைத்து வைத்த கலவையை அதணுடன் கலந்து , கொதி வரும் போது கூட்டி தேங்காய் பால் ஊற்றி தீயை குறைத்து வைக்கவும்.
8.பிறகு எலுமிச்சை பழம் சாறு ஊற்றி இற்க்க வேண்டும்.
Submitted by: Jessi Ravel, Chennai 


திராட்சை வைன் 
தேவையான பொருட்கள்-திராட்சை5 கிலோ சுடுதண்ணீர் 6 1/2 கிலோசீனி6 1/2 கிலோஈஸ்ட்தேவைக்கு ஏற்பமுளை கட்டிய கோதுமைதேவைக்கு ஏற்ப

செயல் முறை:
1.6 1/2 லிட்டர் தண்ணீரை சுடாக்க வேண்டும்.
2.திராட்சைப் பழத்தினை நன்கு கழுவி சுத்தமான மெல்லிய துணியில் , ஈரம் நீக்கி துடைக்கவும்.
3.ஒரு ஜாடியை சுத்தப்படுத்தி நன்கு உலர்ந்த திராட்சை பழத்தை அதனுள் போட்டு மத்து வைத்து நன்கு நசுக்கி விடவேண்டும்.
4.அதில் ஆற வைத்த தண்ணீறையும், சினியையும் ஒரு துணியில பட்டை கிரம்பு சிறு பொட்டலமாக கட்டி போடவும்.
5.நான்கு நாள் கழித்து ஈஸ்ட் சேர்க்கவும்.
6.முளை கட்டிய கோதுமை சிறிதளவு சேர்க்கவும்.
7.திரும்பவும் மத்து போட்டு கிளறவும்.
8.30 நாட்கள் கழித்து மிண்டும் கிளறவும்.
9.45 நாட்கள் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றவும்.
Submitted by: Jessi Ravel, Chennai 



புளி மீன்
 தேவையான பொருட்கள்-எண்ணெய்1 கப் வினிகர்1 கப்புளிஎலுமிச்சை பழம் அளவுகடுகு1 டிஸ்புன்உப்புதேவைக்கு ஏற்பகாய்ந்த மிளகாய்20 துண்டு கருவாடு15மஞ்சள்சிறு துண்டுஇஞ்சி , பூண்டுதேவைக்கு ஏற்ப

செயல் முறை:
1.அம்மியை நன்கு கழுவவும்.
2.அம்மியை வினிகர் இட்டு மீண்டும் கழுவவும்.
3.கடுகு, மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைத் தெவையான உப்பு வைத்து அரைக்கவும்.
4.கருவாட்டுத் துண்டுகளை வினிகரில் கழுவவும்.
5.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி, மிதமான சூடு வரும்பொழுது அரைத்து வைத்துள்ள கலவைதனை போட்டு கிளறவும்.
6.பின் கருவாட்டு துண்டுகளை இதணுள் போட்டு புளி ஊற்றவும்.
7.லேசான கொதி வந்தவும் அடுப்பிலிருந்து இற்க்கவும்.
8.ஆறிய பின் பாட்டில்களில் ஊற்றி வைக்கவும்.
9.தேவைப்படும் பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி பாட்டிலில் உள்ள கருவாட்டு துண்டஇங்களை எடுத்து போறித்து உண்டு மகிழலாம்.
Submitted by: Jessi Ravel, Chennai 


மாங்காய் அச்சார்
 தேவையான பொருட்கள்-தயார் செய்யப்பட்ட வினிகர், பனைமரத்து பதனீரில் மிளகாய், தேவைக்கு ஏற்ப கடுகுதேவைக்கு ஏற்ப முருங்கைப் பட்டைதேவைக்கு ஏற்ப உப்பு தேவைக்கு ஏற்ப காய்ந்த மிளகாய் தேவைக்கு ஏற்ப இஞ்சி , பூண்டு தேவைக்கு ஏற்ப

செயல் முறை:
1.மாங்காயை 10 நாட்களுக்கு ஊற வைக்கவும்.
2.அம்மியை வினிகரில் கழுவவும்.
3.மிளகாய், வத்தல், முருங்கைப் பட்டையின் உள் பகுதி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்து உப்பில் ஊறப் போட்ட மாங்காயுடன் இக்கலவைதனை கலந்து, ஜாடியில் போட்டு வைக்கவும். கெட்டு போகாது.
Submitted by: Jessi Ravel, Chennai 


மீன் சொதி
தேவையான பொருட்கள்-மீன் காரல்(பெரியது) தக்காளி2 சின்ன வெங்காயம்10 பச்சை மிளகாய்5 முழு மிளகு1 தேக்கரண்டிதேங்காய்1/2 மூடி மஞ்சள் தூள் தேவைக்கு ஏற்ப உப்புதேவைக்கு ஏற்ப கருவேப்பிலைதேவைக்கு ஏற்ப

செயல் முறை:
1.தேங்காய்த் துருவி இரண்டு முறை பால் எடுக்கவும்.
2.மீனை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், மிளகாய்(இரண்டாகக் கீறி), பாதி அளவு உப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி நிதானமான நெருப்பில் வேக வைக்க வேண்டும்.
3.சுமார் 15 நிமிடம் கொதித்து வெந்த பின்னர் தேங்காய் பாலை சேர்த்து, மேதம் உள்ள உப்பைச் சேர்த்து இறக்கவும்.இறக்கிய பின் முழு அல்லது பாதி எலுமிச்சம்பழம் ருசிக்கு ஏற்ப பிழியவும்.

குறிப்பு:1.தேங்காய் பால் இரண்டு தடைவ மட்டும் எடுக்கவும்.2.தேங்காய் பால் ஊற்றிய பின் சொதியை கொதிக்க விடக்கூடாது.3.சீலா, விளை மீன், பாறை மீன், கலவா மீன் ஆகியவற்றின் தலையையும் உபயோகிக்கலாம்.4.இந்த சொதி 5 பேருக்கு போதுமானதாக இருக்கும்.5.தக்காளி சேர்ப்பது இப்பொழுது வழக்கமாகி விட்டது.ஆனால் பாரம்பரிய பரவர் சொதியில் தக்காளி சேர்ப்பது இல்லை.
Submitted by: Jessi Ravel, Chennai 



மீன் குழம்பு1 
தேவையான பொருட்கள்-மீன் - வத்தல்10சின்ன வெங்காயம்5பச்சை மிளகாய்2மிளகு5மல்லி1 தேக்கரண்டிசீரகம்1 தேக்கரண்டிதேங்காய்1/4 மூடிமஞ்சள்தேவைக்கு ஏற்பஉப்புதேவைக்கு ஏற்பகருவேப்பிலைதேவைக்கு ஏற்பவெள்ளை பூண்டுதேவைக்கு ஏற்ப

செயல் முறை:
1.முதலில் மஞ்சளை நல்ல மையாக அரைத்து கொள்ளவும்.
2.பின்னர் வத்தல், மல்லி, சீரகம்,மிளகு சேர்த்து ஒன்றாக அரைத்து அம்மியில் இருந்து வழித்துக் கொள்ளவும்.
3.தேங்காய் தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
4.பெரிய எலுமிச்சம்பழம் அளவு புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
5.மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
6.சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,கருவேப்பிலை, புண்டு ஆகியவற்டுடன் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து மன் சட்டியில் கரைத்து குழம்பாக்கிக் கோள்ள வெண்டும் .
7.இந்தக் குழம்பில் சுத்தம் செய்த மீனைச் சேர்த்து கோதிக்க வைத்து வேக விடவும். வெந்த பின் இறக்க வெண்டும்.

குறிப்பு:1.பெரிய மீனாக இருந்தால் தாளிக்கக் கூடாது.2.சாளை போன்ற சிறிய மீனாக இருந்தால் மண் சட்டியை காய வைத்து எண்ணெய் ஊற்றாமல், சிறிதளவு கடுகு, வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு வெடித்த உடன் கொதித்த குழம்பை ஊற்றி மற்றொரு மண் சட்டியைக் கவிழ்த்து மூடவும்.3.தக்காளி சேர்ப்பது பாரம்பரிய பரவர் சமையலில் வழக்கம் இல்லை.
Submitted by: Jessi Ravel, Chennai 


மீன் குழம்பு -2 

செயல் முறை:
1.மஞ்சள் – 1 துண்டு, மிளகு – 1 ½ தேக்கரண்டி, சீரகம் -1/4 தேக்கரண்டி ,மல்லி - 1 தேக்கரண்டி இவற்றை மையாக அரைத்துக் கொள்ளவும்
2.தேங்காய் பெரிய துண்டு 1 இதைத் தனியாக மையாக அரைத்துக் கொள்ளவும்.
3.நாட்டுப்பூண்டு -2 உரித்துக் கொள்ளவும்.
4.சின்ன வெங்காயம் – 10 உரித்து இரண்டாக குறுக்கே வெட்டிக் கொள்ளவும்.
5.பச்சை மிளகாய் – 2 கீறி ஆனால் முழுவதாக வைத்துக் கொள்ளவும்.
6.புளி ½ எலுமிச்சம்பழம் அளவு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
7.மீனைச் சுத்தம் செய்து இந்த அனைத்து மசாலாக்களையும், புளிக்கரைசல், உரித்துப் பூண்டு நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க வைத்து வேக விடவும்..
8.மீன் வெந்து, குழம்பில் மசாலா வாடை நீங்கிய பின் இறக்கவும்.

குறிப்பு:1.இந்தக்குழம்பு குழந்தை பெற்ற பாலூட்டும் தாய்மாருக்குக் கொடுப்பது.2.தக்காளி சேர்க்கக்கூடாது.3.பெரிய, அகலமான காரல் மீன் பயன்படித்துவது வழக்கம்.
Submitted by: Jessi Ravel, Chennai 


மீன் புட்டு 

செயல் முறை:
1.வாள மீன் – 1 , மீன் தலையை நீக்கிவிட்டு சுத்தம் செய்யவும்.
2.நடுத்தரத் துண்டுகளாக வெட்டி, சிறிது மஞ்சள், உப்பு, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
3.வெந்த மீன் ஆறிய பின் மீனை சுத்தமாக, முள் நீக்கி உதிர்த்துக் கொள்ளவும்
4.பச்சை மிளகாய் 2 , பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
5.தேங்காய் – ½ மூடி துருவிக் கொள்ளவும்.
6.வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் கருவேப்பிலை, வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், வெங்காயம் கண்ணாடி போல வதங்கியதும், உதிர்த்த மீனையும், தேங்காய் துருவலையும் சேர்த்து சட்டியில் கொட்டி கிளரவும்.
7.எல்லாம் ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.

குறிப்பு:1.தேங்காய் அதிகம் சேர்த்தால் மீன் சுவை குன்றிவிடும்.2.சுறா மீனிலும் இந்தப்புட்டு செய்யலாம்.3.சில ஊர்களில் சீலா மீனிலும் செய்கிறார்கள்
.Submitted by: Jessi Ravel, Chennai


நன்றி: globalparavar.org

No comments:

Post a Comment