Tuesday 9 October 2012

இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக அருந்ததி ராயின் அறிக்கை (தமிழ் வடிவம்).




கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை எதிர்த்துப் போராடும் இடிந்தகரை மக்களோடு நான் முழு நல்லாதரவோடு நிற்கிறேன். ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்ட போது நான் அங்கு இருந்தேன். அந்த பேரழிவுக்கு பிறகு அணு சக்தியை பயன்படுத்தும் எல்லா நாடுகளும் தங்களது கொள்கையை மாற்றிக் கொள்ள போவதாக அறிவித்தன. இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் அறிவித்திருந்தன.

அன்றாடக் கழிவுகளை கூட அகற்றுவதற்கு வக்கற்றது நமது அரசாங்கம். தொழில் கழிவுகளையும் நகரக கழிவுகளையும் பற்றி சொல்லவே வேண்டாம். அணு உலைக் கழிவுகளை கையாளத் தெரியும் என்று அது தைரியமாகச் சொல்வதை எப்படி நம்புவது? இந்தியாவில் அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்வதையும் எப்படி நம்புவது? போபால் விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த யூனியன் கார்பைடோடு (இப்போது டௌ கெமிக்கல்) கை கோர்த்த அரசு இது என்று நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் அணு பேரழிவை எப்படிப்பட்ட நிவாரணமும் சரிப்படுத்திவிட முடியாது. கூடங்குளத்தில் நடந்து கொண்டிருப்பது வளர்ச்சியின் பெயரால் ஒரு கிரிமினல் குற்றம் என்று நான் நம்புகிறேன் – அருந்ததி ராய்

1 comment: