Thursday 18 July 2013

உப்பரிகை நிலா

20 வருடங்களுக்கு முன் நானும் படித்த நாவலில்  பசுமரத்து ஆணி போல் இன்னும் என் நெஞ்சில் நிலைத்துவிட்ட  கவிதை. நாவலை எழுதியவர் சுபா என்று நினைக்கிறேன்.


"அந்தரத்தில் உப்பரிகை
அதில் ஓர் சொப்பனத்து சுந்தரி
நேர் கீழே
பொருதிப்பார்க்க இரு மல்லர்,

நெருங்கி வந்தார்
கிசுகிசுத்தார்...

நீசமகள்,
ஞானமில்லா வெற்றழகுப் பிண்டம்
இதைப் பெற்றுவிட போரிடவோ
அறிவுதாங்குமிரு பேரகலப் புயங்கள்
விட்டுவிடு என்றார்
விலகி நின்றார்

உப்பரிகை நிலா
உள்முற்றம் போயிற்று... "